கிழக்கு மாகாணத்திற்கான மூலோபாய திட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்) .என்.தமிழ்ச்செல்வம், கிழக்கு மாகாணத்தின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அபிவிருத்தி மூலோபாயத் திட்டத்தை அண்மையில் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத்திடம் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து கையளித்தார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் மாகாணத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் ஒதுக்கீடுகள் மற்றும் புதிய முதலீடுகள் மூலம் இங்கு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் .ஈ.ஏ.முனாசீர் அவர்களும் கலந்துகொண்டார்.
கிழக்கு அபிவிருத்தி மூலோபாய திட்டம் வெளியிட்டு வைப்பு SamugamMedia கிழக்கு மாகாணத்திற்கான மூலோபாய திட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்) .என்.தமிழ்ச்செல்வம், கிழக்கு மாகாணத்தின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அபிவிருத்தி மூலோபாயத் திட்டத்தை அண்மையில் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத்திடம் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து கையளித்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் மாகாணத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் ஒதுக்கீடுகள் மற்றும் புதிய முதலீடுகள் மூலம் இங்கு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் .ஈ.ஏ.முனாசீர் அவர்களும் கலந்துகொண்டார்.