யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்ணளவாக 38 சதவீதமான மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றனர் என்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25) நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை அமைச்சில் எடுத்தாலும், பிரதேச மட்டத்தில் உள்ளூர் அமைப்புக்களை ஒன்றிணைத்து தீர்வுகளை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழில் சார்ந்த குடும்பங்கள் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 38 சதவீதமாகவுள்ளனர். அதனால் விசேடமாக கவனிக்கப்பட வேண்டிய மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது.
மேலும் ஜனாதிபதி கடற்றொழில் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், குறுகிய காலத்தில் தீர்க்க வேண்டிய கடற்றொழிலாளர்களின்பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். எமது அரசாங்கம் வறுமை ஒழிப்பு, டியிற்றல் முறைமை மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தி வருகின்றது. கடற்றொழி்லாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து தீர்க்க வேண்டும்.- என்றார்.
யாழ்ப்பாணத்தில் 38 சதவீதமான மீனவ குடும்பங்கள் - விசேடமாக கவனிக்க வேண்டும் என்கிறார் மீனவ பிரதி அமைச்சர் யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்ணளவாக 38 சதவீதமான மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றனர் என்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை அமைச்சில் எடுத்தாலும், பிரதேச மட்டத்தில் உள்ளூர் அமைப்புக்களை ஒன்றிணைத்து தீர்வுகளை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழில் சார்ந்த குடும்பங்கள் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 38 சதவீதமாகவுள்ளனர். அதனால் விசேடமாக கவனிக்கப்பட வேண்டிய மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது. மேலும் ஜனாதிபதி கடற்றொழில் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், குறுகிய காலத்தில் தீர்க்க வேண்டிய கடற்றொழிலாளர்களின்பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். எமது அரசாங்கம் வறுமை ஒழிப்பு, டியிற்றல் முறைமை மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தி வருகின்றது. கடற்றொழி்லாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அனைவரும் எம்முடன் ஒன்றிணைந்து தீர்க்க வேண்டும்.- என்றார்.