மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று(12) மாலை 2.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திலே வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதில் மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.