உள்ளூராட்சி சபைக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் திகதிகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணைகளை சமர்ப்பித்து நிறைவேற்றுவதன் மூலம் சட்டமூலத்தில் முரண்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அனுர திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் பிரேமநாத் தொலவத்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அனுர திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.