• May 07 2024

அரிசி வாங்க பணம் தருமாறு அமைச்சரவையில் மஹிந்த கோரிக்கை!

Sharmi / Jan 5th 2023, 10:51 am
image

Advertisement

நெல் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை திறைசேரி அல்லது இரண்டு பிரதான அரச வங்கிகள் அல்லது நியாயமான வட்டி விகிதத்தில் வழங்குமாறு கோரி அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்க  ஏற்பாடு செய்துள்ளதாக  விவசாய,  வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்  மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

2022/23 பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் அதற்கான அமைச்சுப் பத்திரத்தில் அமைச்சர் கையொப்பமிட்டதுடன், அமைச்சுப் பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை இந்தப் பருவத்தில் இதுவரை 777,000 ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

அரிசி வாங்க பணம் தருமாறு அமைச்சரவையில் மஹிந்த கோரிக்கை நெல் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை திறைசேரி அல்லது இரண்டு பிரதான அரச வங்கிகள் அல்லது நியாயமான வட்டி விகிதத்தில் வழங்குமாறு கோரி அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்க  ஏற்பாடு செய்துள்ளதாக  விவசாய,  வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்  மஹிந்த அமரவீர தெரிவித்தார்.இன்றைய சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,2022/23 பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் அதற்கான அமைச்சுப் பத்திரத்தில் அமைச்சர் கையொப்பமிட்டதுடன், அமைச்சுப் பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.அதேவேளை இந்தப் பருவத்தில் இதுவரை 777,000 ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement