• May 21 2024

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத சாரதி - வயோதிபப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை SamugamMedia

Chithra / Feb 18th 2023, 5:16 pm
image

Advertisement

பியந்தல மொரட்டுவ வீதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் பிலியந்தலை சுவாரபொல பிரதேசத்தில் வசிக்கும் 74 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிலியந்தலையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதுடன், இவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத சாரதி - வயோதிபப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை SamugamMedia பியந்தல மொரட்டுவ வீதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் பிலியந்தலை சுவாரபொல பிரதேசத்தில் வசிக்கும் 74 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலும், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிலியந்தலையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிவதுடன், இவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement