கண்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நாளை (19) நடைபெறும் குடியரசு பெரஹெரவை முன்னிட்டு கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த போக்குவரத்து திட்டம் நாளை மாலை 05 மணி முதல் குடியரசு பெரஹெர ஊர்வலம் முடியும் வரை அமுல்படுத்தப்படும்.
கண்டி மங்களகூடத்தில் இருந்து நாளை ஆரம்பிக்கும் பெரஹெர, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி வழியாக ரஜ வீதியில் பிரவேசித்து மீண்டும் தலதாமாளிகையை வந்தடையும்.
இதேவேளை, ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடியரசு பெரஹெர, இலங்கையின் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடியரசு பெரஹெர - சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு SamugamMedia கண்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நாளை (19) நடைபெறும் குடியரசு பெரஹெரவை முன்னிட்டு கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.இந்த போக்குவரத்து திட்டம் நாளை மாலை 05 மணி முதல் குடியரசு பெரஹெர ஊர்வலம் முடியும் வரை அமுல்படுத்தப்படும்.கண்டி மங்களகூடத்தில் இருந்து நாளை ஆரம்பிக்கும் பெரஹெர, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி வழியாக ரஜ வீதியில் பிரவேசித்து மீண்டும் தலதாமாளிகையை வந்தடையும்.இதேவேளை, ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடியரசு பெரஹெர, இலங்கையின் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.