அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் அருகே இன்று காலை 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் போர்ட் பிளேயரில் இருந்து 126 கிமீ தென்கிழக்கே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 12:53 மணிக்கு மேற்பரப்பில் இருந்து 69 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
தெற்காசியா பகுதியில் அண்மைய காலங்களில் இலகுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள நிலநடுக்கவியல் துறைகள் இந்த நில அதிர்வு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளன.