கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் மட்டக்களப்பில் உள்ள ஆளுநர் இல்லத்தில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் முகாமையாளர் த சியோ காந்தா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் எடோர்டோ ஸ்பாக்கா ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல் ஒன்று (03) மேற்கொள்ளப்பட்டது.
இதில் கிழக்கு மாகாணத்தில் உலக வங்கியின் அனுசரணையில் 70 இற்கும் மேற்பட்ட சமூகப் பொருளாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத் திட்டத்தின் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த உரிய அமைச்சு முழு பங்களிப்பு வழங்க வேண்டும் என ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.