• May 19 2024

கிழக்கு பல்கலைக்கழகத்தில். கறுப்பு ஜூலை நினைவேந்தல் முன்னெடுப்பு! samugammedia

Tamil nila / Jul 23rd 2023, 6:33 pm
image

Advertisement

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால்  ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மதிய வேளையில் கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


இதன்போது பல்கலைக்கழகத்தின்  நாவல் மரத்தடியின் கீழ்  மாணவர்களால் நினைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நடைபெற்றது. 

இதனையடுத்து, பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உள்ள கறுப்பு ஜூலை நினைவுருவ படத்துக்கு மாணவர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.



அடுத்ததாக, 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. 



இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில். கறுப்பு ஜூலை நினைவேந்தல் முன்னெடுப்பு samugammedia சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால்  ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மதிய வேளையில் கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது பல்கலைக்கழகத்தின்  நாவல் மரத்தடியின் கீழ்  மாணவர்களால் நினைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நடைபெற்றது. இதனையடுத்து, பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உள்ள கறுப்பு ஜூலை நினைவுருவ படத்துக்கு மாணவர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.அடுத்ததாக, 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. இந்நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement