திறைசேரிக்கு சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் தனியார் துறை நிறுவனங்களை நிர்மாணித்து அங்குள்ள கைதிகளை வேலைக்கு அமர்த்தும் வேலைத்திட்டத்திற்கு நான்கு தனியார் நிறுவனங்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.