யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 4 இடங்களில் மாதா சிலைகள் நேற்று அதிகாலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
வெகோ மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மாதா சிலைகள் மீது கல்லால் வீசி சேதமாக்குவது சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.
சுதுமலை தெற்கு, சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைதாகியிருந்தார்.
அவர் சைவ சமயத்தை சேர்ந்தவர். மனைவி கிறிஸ்தவர். அவர்கள் திருமணம் செய்து சில வருடங்களாகி பிள்ளைகள் கிடைக்காத விரக்தியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
"பிள்ளை வேண்டுமென மாதவிடம் நேர்த்தி வைத்தேன். என்றாலும், பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். சம்பவ தினத்தன்று மதுபோதையில் இருந்தேன். அப்போது என்னை அறியாமல் மாதா சிலைகளை சேதப்படுத்தியிருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
'மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்கவில்லை': யாழில் மாதா சிலைகளை சேதப்படுத்தியவரின் அதிர்ச்சி வாக்குமூலம் samugammedia யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 4 இடங்களில் மாதா சிலைகள் நேற்று அதிகாலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன.வெகோ மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மாதா சிலைகள் மீது கல்லால் வீசி சேதமாக்குவது சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.சுதுமலை தெற்கு, சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைதாகியிருந்தார்.அவர் சைவ சமயத்தை சேர்ந்தவர். மனைவி கிறிஸ்தவர். அவர்கள் திருமணம் செய்து சில வருடங்களாகி பிள்ளைகள் கிடைக்காத விரக்தியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்."பிள்ளை வேண்டுமென மாதவிடம் நேர்த்தி வைத்தேன். என்றாலும், பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். சம்பவ தினத்தன்று மதுபோதையில் இருந்தேன். அப்போது என்னை அறியாமல் மாதா சிலைகளை சேதப்படுத்தியிருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.