• May 22 2024

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்...!samugammedia

Sharmi / Nov 20th 2023, 6:55 am
image

Advertisement

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி இன்றையதினம்(20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

அகழ்வுப்பணி தொடர்பாக தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை அகழ்வு பணி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

இன்று காலை 8 மணியளவில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும் இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.



கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்.samugammedia முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி இன்றையதினம்(20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.அகழ்வுப்பணி தொடர்பாக தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.இதேவேளை அகழ்வு பணி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,இன்று காலை 8 மணியளவில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும் இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.மேலும், நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement