முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பறங்கியாற்று பகுதியில் அனுமதி
பத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மணல் ஏற்றிய இரண்டு உழவு
இயந்திரங்கள் நட்டாங்கண்டல் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பறங்கியாற்றில்
உட்பகுதியில் உழவு இயந்திரங்களை இறக்கி மணல் ஏற்றிய குற்றச்சாட்டிலேயே
குறித்த உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உழவு இயந்திரங்கள்
நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உழவு இயந்திர சாரதிகள் இருவரை பொலிஸ் பிணையில் செல்ல பொலிசார் அனுமதித்துள்ளதாகவும், குறித்த உழவு இயந்திர சாரதிகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மாங்குளம் நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 21-06-2023 அன்று பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.