ஜப்பானில் இராணுவ பயிற்சியின்போது 3 ராணுவ அதிகாரிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது
இந்த சம்பவத்தினால் நாடு முழுவதும் பயிற்சிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய ஜப்பானின் கிபு மாகாணத்தில் ராணுவத்தின் தரைப்படை பிரிவு வீரர்கள் 120 பேர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அங்குள்ள ஹினோ கிஹோன் துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் புதிதாக சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது அந்த ராணுவ அதிகாரியை நோக்கி திடீரென அந்த வீரர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதனை தடுக்க முயன்ற 2 வீரர்களும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்தனர்.
இதனால் அந்த பயிற்சி ராணுவ வீரரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .