வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பின்பகுதியான சுற்றுவட்ட வீதியினை சிரமதானம் செய்யும் நடவடிக்கை இன்று (16.12.2022) காலை தொடக்கம் மதியம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரினால் இவ் நடவடிக்கை இடம்பெற்றிருந்ததுடன் வடிகாண்கள் , பற்றைகள் என்பன துப்பரவு மேற்கொள்ளப்பட்டதுடன் நகரசபையின் உதவியுடன் குப்பைகளும் அகற்றப்பட்டிருந்தன.
இவ் நடவடிக்கையில் ஈரோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினர் 20க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.