மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று(29) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இந்த கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கிராம மட்ட தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசாங்கம் பல்வேறு உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் இந்த உற்பத்தி கண்காட்சி நடாத்தப்படுகின்றது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான திருமதி பிரசாந்தன், திருமதி சுதா சதாகரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.