கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த 18ம் திகதி கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன் நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று அகழ்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.