• May 02 2024

நாட்டில் பேஸ்புக் தடை செய்யப்படும்... உயர் நீதிமன்றம் அதிரடி...! samugammedia

Tamil nila / Jun 15th 2023, 3:17 pm
image

Advertisement

தவறான தகவல்  பரப்பப்பட்டால் நாட்டில் பேஸ்புகை  தடை செய்ய  நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மங்களூரு பிகாரனகட்டேயைச் சேர்ந்த சைலேஷ்குமார் என்பவர்  சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகின்றார். அவர்  2019  ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட நிலையில் அவருக்கு மிரட்டல் வந்தமையால் பயந்து போய் தனது கருத்தை நீக்கியுள்ளார். 

இதையடுத்து, ம நபர்கள்அவரது பெயரில்  போலியாக பேஸ்புக் கணக்கினை ஆரம்பித்து, சவுதி அரேபிய அரசு குறித்து அவதுாறு கருத்துகளை பரப்பியமையால் சைலேஷ்குமாரை அந்நாட்டு பொலிஸார்  கைது செய்துள்ளனர். 

இதனால்,இது குறித்து  மனைவி மங்களூரு பொலிஸாரிடம் புகாரளித்ததும் அவர்கள் சரியாக விசாரிக்கவில்லை. அத்துடன், தனது கணவர் பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபரின் தகவல் கேட்டு, பேஸ்புக் நிறுவனத்திற்கு கடிதமும் எழுதியும் பதில் கிடைக்கவில்லை. 

அதையடுத்து, மத்திய அரசின் உதவியை நாடியும் அதன் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், 2021 ஆம்  ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தன் கணவரை மீட்பதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு  மனு ஒன்றையு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில்  விசாரணைக்கு வந்ததுள்ளது. 

அதன் போது நீதிபதி,  போலி முகநுால் கணக்கு தொடங்கிய நபர் குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு சிறையில் இருக்கும், மனுதாரர் கணவரை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

அது மட்டுமன்றி, பேஸ்புக் மூலம் தவறான தகவலை பரப்பினால் இந்தியாவில் பேஸ்புக்கை தடை செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


நாட்டில் பேஸ்புக் தடை செய்யப்படும். உயர் நீதிமன்றம் அதிரடி. samugammedia தவறான தகவல்  பரப்பப்பட்டால் நாட்டில் பேஸ்புகை  தடை செய்ய  நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மங்களூரு பிகாரனகட்டேயைச் சேர்ந்த சைலேஷ்குமார் என்பவர்  சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகின்றார். அவர்  2019  ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட நிலையில் அவருக்கு மிரட்டல் வந்தமையால் பயந்து போய் தனது கருத்தை நீக்கியுள்ளார். இதையடுத்து, ம நபர்கள்அவரது பெயரில்  போலியாக பேஸ்புக் கணக்கினை ஆரம்பித்து, சவுதி அரேபிய அரசு குறித்து அவதுாறு கருத்துகளை பரப்பியமையால் சைலேஷ்குமாரை அந்நாட்டு பொலிஸார்  கைது செய்துள்ளனர். இதனால்,இது குறித்து  மனைவி மங்களூரு பொலிஸாரிடம் புகாரளித்ததும் அவர்கள் சரியாக விசாரிக்கவில்லை. அத்துடன், தனது கணவர் பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபரின் தகவல் கேட்டு, பேஸ்புக் நிறுவனத்திற்கு கடிதமும் எழுதியும் பதில் கிடைக்கவில்லை. அதையடுத்து, மத்திய அரசின் உதவியை நாடியும் அதன் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், 2021 ஆம்  ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தன் கணவரை மீட்பதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு  மனு ஒன்றையு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில்  விசாரணைக்கு வந்ததுள்ளது. அதன் போது நீதிபதி,  போலி முகநுால் கணக்கு தொடங்கிய நபர் குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு சிறையில் இருக்கும், மனுதாரர் கணவரை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி, பேஸ்புக் மூலம் தவறான தகவலை பரப்பினால் இந்தியாவில் பேஸ்புக்கை தடை செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement