• May 17 2024

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம்: தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்த 2 வயது குழந்தை..! samugammedia

Chithra / Jun 15th 2023, 3:11 pm
image

Advertisement

பேருவளை நகரில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பெண் ஒருவரும் 2 வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று மாலை  மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பேருவளை நகரை அண்மித்த மொரகல்ல பிரதேசத்தில் இரண்டு பெண்கள் நடந்து செல்கையில் எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் சென்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் பெண் ஒருவர் சுமந்து வந்த குழந்தை சுமார் 10 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்த காட்சியானது சிசிடிவி கருவியில் பதிவாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த பெண் ஒருவரும் 2 வயது குழந்தையும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு முச்சக்கர வண்டி சாரதி பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று(15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம்: தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்த 2 வயது குழந்தை. samugammedia பேருவளை நகரில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பெண் ஒருவரும் 2 வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்தானது நேற்று மாலை  மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.பேருவளை நகரை அண்மித்த மொரகல்ல பிரதேசத்தில் இரண்டு பெண்கள் நடந்து செல்கையில் எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் சென்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் பெண் ஒருவர் சுமந்து வந்த குழந்தை சுமார் 10 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்த காட்சியானது சிசிடிவி கருவியில் பதிவாகியுள்ளது.விபத்தில் காயமடைந்த பெண் ஒருவரும் 2 வயது குழந்தையும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு முச்சக்கர வண்டி சாரதி பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று(15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement