• Jul 27 2024

மகளை பலாத்காரம் செய்த தந்தை சுட்டுக் கொலை! samugammedia

Tamil nila / Sep 25th 2023, 5:53 pm
image

Advertisement

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையை சுட்டுக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்துடன், தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன் போது, தனது தந்தை தன்னை கடந்த 3 மாதங்களாக பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்,

இதனால் கோபமடைந்த குறித்த சிறுமி, தனது தந்தையை கொலை செய்வது என முடிவெடுத்துள்ளார்.

பின்னர் தந்தையின், துப்பாக்கியினால் அவரையே சுட்டுக்கொலை செய்துள்ளார் என அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையை காவல்துறையினர் கைது செய்ததுடன், அவருக்கு் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளை பலாத்காரம் செய்த தந்தை சுட்டுக் கொலை samugammedia பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையை சுட்டுக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்துடன், தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.இதன் போது, தனது தந்தை தன்னை கடந்த 3 மாதங்களாக பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்,இதனால் கோபமடைந்த குறித்த சிறுமி, தனது தந்தையை கொலை செய்வது என முடிவெடுத்துள்ளார்.பின்னர் தந்தையின், துப்பாக்கியினால் அவரையே சுட்டுக்கொலை செய்துள்ளார் என அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையை காவல்துறையினர் கைது செய்ததுடன், அவருக்கு் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement