எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 9 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த
மாதம் 25ம் திகதி இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது
செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றினால் இன்று
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
18 மாத சாதாரண சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்து ஊற்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த
ஒன்பது மீனவர்களையும் மெரிகானா முகாமுக்கு அனுப்பி தாயத்துக்கு
அனுப்புவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.