ஹக்மன – வலஸ்முல்ல வீதியில் திகன வளைவுக்கு அருகில் இன்று (27) காலை முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் இரு பாடசாலை மாணவர்கள், இரு பெண்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதியுமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் கங்கோடாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹக்மன நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.