• Jul 05 2024

Anaath / Jul 3rd 2024, 10:41 am
image

Advertisement

அஸ்ஸாமில்   நீடிக்கும் கடும் வெள்ளத்தில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளதுடன்  6.71 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள பலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் 28 மாவட்டங்களில் உள்ள 11.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக மாறியுள்ளது. குறிப்பாக திப்ருகா் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொடா்ந்து 7-ஆவது நாளாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் வெள்ளத்தால் 28 மாவட்டங்களில் உள்ள 11.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக மாறியுள்ளது. குறிப்பாக திப்ருகா் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொடா்ந்து 7-ஆவது நாளாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த மாநில அஸ்ஸாம் மாநில பேரிடர்  மத்திய நிலையத்தின்  வெள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி டின்சுகியா மாவட்டத்தில் இரண்டு பேரும், தேமாஜி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்தே பலி எண்ணிக்கை இவ்வாறு 38 ஆக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கம்ரூப், தமுல்பூர், சிராங், மோரிகான், லக்கிம்பூர், பிஸ்வநாத், திப்ருகார், கரீம்கஞ்ச், உடல்குரி, நாகோன், போங்கைகான், சோனித்பூர், கோலாகாட், ஹோஜாய், தர்ராங், சாரெய்டியோ, நல்பாரி, ஜோர்ஹாட், சிவசாகர், கர்பி மா கோலி அங், சிவசாகர், கர்பி மாஜி அங் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் லக்கிம்பூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1,65,319 பேரும், தர்ராங் மாவட்டத்தில் 1,47,143 பேரும், கோலாகாட் மாவட்டத்தில் 1,06,480 பேரும், தேமாஜி மாவட்டத்தில் 1,01,888 பேரும், டின்சுகியாவில் 74,848 பேரும், பிஸ்வநாத்தில் 73,074 பேரும், காச்சார்நிட் மஜூவில் 1,69,567 பேரும், மோரிகான் மாவட்டத்தில் 48,452 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  42476.18 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் இரண்டாவது அலை வெள்ளத்தில் 84 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2208 கிராமங்கள் பாதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தால் இதுவரை 8,32,099 விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்ஸாம் மாநில பேரிடர்  மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளம் - 38 பேர் பலி. அஸ்ஸாமில்   நீடிக்கும் கடும் வெள்ளத்தில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளதுடன்  6.71 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு ஏற்பட்டுள்ள பலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் 28 மாவட்டங்களில் உள்ள 11.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக மாறியுள்ளது. குறிப்பாக திப்ருகா் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொடா்ந்து 7-ஆவது நாளாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வெள்ளத்தால் 28 மாவட்டங்களில் உள்ள 11.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக மாறியுள்ளது. குறிப்பாக திப்ருகா் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொடா்ந்து 7-ஆவது நாளாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அந்த மாநில அஸ்ஸாம் மாநில பேரிடர்  மத்திய நிலையத்தின்  வெள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி டின்சுகியா மாவட்டத்தில் இரண்டு பேரும், தேமாஜி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்தே பலி எண்ணிக்கை இவ்வாறு 38 ஆக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் கம்ரூப், தமுல்பூர், சிராங், மோரிகான், லக்கிம்பூர், பிஸ்வநாத், திப்ருகார், கரீம்கஞ்ச், உடல்குரி, நாகோன், போங்கைகான், சோனித்பூர், கோலாகாட், ஹோஜாய், தர்ராங், சாரெய்டியோ, நல்பாரி, ஜோர்ஹாட், சிவசாகர், கர்பி மா கோலி அங், சிவசாகர், கர்பி மாஜி அங் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் லக்கிம்பூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1,65,319 பேரும், தர்ராங் மாவட்டத்தில் 1,47,143 பேரும், கோலாகாட் மாவட்டத்தில் 1,06,480 பேரும், தேமாஜி மாவட்டத்தில் 1,01,888 பேரும், டின்சுகியாவில் 74,848 பேரும், பிஸ்வநாத்தில் 73,074 பேரும், காச்சார்நிட் மஜூவில் 1,69,567 பேரும், மோரிகான் மாவட்டத்தில் 48,452 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்  42476.18 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் இரண்டாவது அலை வெள்ளத்தில் 84 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2208 கிராமங்கள் பாதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது.வெள்ளத்தால் இதுவரை 8,32,099 விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்ஸாம் மாநில பேரிடர்  மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement