இலங்கைக்கு, நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் தலைவருமான மாதவ் குமார் விஜயம் செய்யவுள்ளார்.
மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக நேபாள ஊடகம் ஓன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருக்கும் போது, முன்னாள் பிரதமர் தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்திலும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.