யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட யாழ் நகரக் குளம் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கலானது இன்றைய தினம் (07.12.2022) நாட்டப்பட்டது.
இத் திட்டமானது மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த திட்டம் 100 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.