குரோஷியாவில் (Croatia) இருந்து சால்ஸ்பர்க் (Salzburg) நோக்கிச் சென்ற சிறிய விமானமொன்று ஆஸ்திரியாவில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்து சம்பவம் சிரஸ் எஸ்ஆர்20 (Cirrus SR20) விமானம் ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் மாகாணத்தில் லின்ட்ஷிங் அருகே நேற்று வியாழக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதாக ஆஸ்திரியா பொலிஸார் தெரிவித்தனர்.
விமானம் குரோஷியாவின் ஜாக்ரெப்பில் இருந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன் புறப்பட்டுள்ளது. விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்ந்து இழந்தப் பின்னரே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விமானத்தில் இருந்து நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இதுவரை எவரது உடலும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.