• Apr 27 2024

மனைவியுடன் கள்ளத்தொடர்பில் நண்பன்..!கழுத்தை அறுத்து இரத்தத்தை உறிஞ்சிய கணவன்..!samugammedia

Sharmi / Jun 26th 2023, 2:15 pm
image

Advertisement

கணவர் ஒருவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து  நண்பனின் கழுத்தை அறுத்து இரத்தத்தினை குடித்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்த 36 வயதான விஜய்  தனது மனைவி மாலாவுடன் வசித்து வந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த நண்பனான 34 வயதான மாரேஷ்சுடன் இணைந்து  சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக வியாபாரம் செய்து வந்துள்ளார். அதனால், விஜயின் வீட்டுக்கு  மாரேஷ் அடிக்கடி சென்று  வந்துள்ள நிலையில், மாலாவுடனும் பழக்கம் ஏற்பட மாரேஷ் அவருடனும்  சிரித்து பேசி வந்துள்ளார். இதனால் விஜயக்கு  தனது மனைவிக்கும் மாரேசுக்கு இடையே கள்ளத்தொடர்பு  உள்ளதாக சந்தேகித்துள்ளார்.

நாளாக நாளாக சந்தேகம் அதிகரித்தமையால் மாரேசை கொலை செய்ய  திட்டமிட்ட விஜய், சரக்கு ஆட்டோவில் மாரேஷ் மற்றும் தனது வேறு ஒரு நண்பரையும்  அழைத்துக் கொண்டு யாரும் இல்லாத  இடத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் விஜய்,  மாரேசிடம் தனது மனைவியுடன் அவர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி தகராறு செய்ய அதற்கு அவர் மறுத்துள்ளார். சிறிது நேரத்தில் தகராறு முற்றிய நிலையில் ஆவேசமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால்,நண்பனின் கழுத்தை அறுத்த பின்னர் தனது வாயை வைத்து உறிஞ்சி  ரத்தம் குடித்துள்ளார்.  அதனை அவர்களுடன் சென்ற  மற்றொரு நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அறிந்த  மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து  மாரேசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையே இருதரப்பும்  சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளனர்.

இந்தநிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த   வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகிய நிலையில் அந்த அடிப்படையில் கெஞ்சர்லஹள்ளி பொலிஸார்  மாரேசிடம் புகார் பெற்று விஜயை கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையின் போது , தனது மனைவியுடன் மாரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக  சந்தேகம் எழுந்தமையால் அவரது கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததாக விஜய் கூறியதை கேட்டு  பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதையடுத்து பொலிஸார் தொடர்ந்தும்  விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

மனைவியுடன் கள்ளத்தொடர்பில் நண்பன்.கழுத்தை அறுத்து இரத்தத்தை உறிஞ்சிய கணவன்.samugammedia கணவர் ஒருவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து  நண்பனின் கழுத்தை அறுத்து இரத்தத்தினை குடித்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்த 36 வயதான விஜய்  தனது மனைவி மாலாவுடன் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த நண்பனான 34 வயதான மாரேஷ்சுடன் இணைந்து  சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக வியாபாரம் செய்து வந்துள்ளார். அதனால், விஜயின் வீட்டுக்கு  மாரேஷ் அடிக்கடி சென்று  வந்துள்ள நிலையில், மாலாவுடனும் பழக்கம் ஏற்பட மாரேஷ் அவருடனும்  சிரித்து பேசி வந்துள்ளார். இதனால் விஜயக்கு  தனது மனைவிக்கும் மாரேசுக்கு இடையே கள்ளத்தொடர்பு  உள்ளதாக சந்தேகித்துள்ளார்.நாளாக நாளாக சந்தேகம் அதிகரித்தமையால் மாரேசை கொலை செய்ய  திட்டமிட்ட விஜய், சரக்கு ஆட்டோவில் மாரேஷ் மற்றும் தனது வேறு ஒரு நண்பரையும்  அழைத்துக் கொண்டு யாரும் இல்லாத  இடத்திற்கு சென்றுள்ளார். பின்னர் விஜய்,  மாரேசிடம் தனது மனைவியுடன் அவர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி தகராறு செய்ய அதற்கு அவர் மறுத்துள்ளார். சிறிது நேரத்தில் தகராறு முற்றிய நிலையில் ஆவேசமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால்,நண்பனின் கழுத்தை அறுத்த பின்னர் தனது வாயை வைத்து உறிஞ்சி  ரத்தம் குடித்துள்ளார்.  அதனை அவர்களுடன் சென்ற  மற்றொரு நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது குறித்து அறிந்த  மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து  மாரேசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையே இருதரப்பும்  சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளனர். இந்தநிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த   வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகிய நிலையில் அந்த அடிப்படையில் கெஞ்சர்லஹள்ளி பொலிஸார்  மாரேசிடம் புகார் பெற்று விஜயை கைது செய்துள்ளனர். பொலிஸாரின் விசாரணையின் போது , தனது மனைவியுடன் மாரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக  சந்தேகம் எழுந்தமையால் அவரது கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததாக விஜய் கூறியதை கேட்டு  பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதையடுத்து பொலிஸார் தொடர்ந்தும்  விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement