இந்தியாவின் விஜய் தொலைக்காட்சின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் தமிழர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
புங்குடுதீவின் மலரும் நினைவுகள் Dinner night 2023 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
முதன் முறையாக அவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திற்கு வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள 'சமூகம் மீடியா'வின் கலையகத்திற்கு வருகை தந்திருந்ததுடன் சமூகம் மீடியாவின் குடும்பத்தினால் அர்களுக்கு சிறப்பான வரவேற்பும் வழங்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செல்வா பலஸ் மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு கலகலப்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் இருவரும் அதில் பங்கேற்கவுள்ளனர்.
குறிப்பாக புங்குடுதீவு மக்கனை ஒன்றிணைத்து அவர்களின் பழைய மலரும் நினைவுகளை மீட்டு சந்தோசத்தை கூட்டுகின்ற ஒரு நிகழ்வாகவே இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், அதில் தமிழர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் கலந்து கொள்ளவிரும்புபவர்கள் 0771208570 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சிகள் இலக்கம் 12 - பூனாரி லேன் கொக்குவில் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள செல்வா பலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
விஜய் ரிவியின் கலக்கப்போவது யாரு புகழ் - பாலா மற்றும் வினோத் யாழிற்கு விஜயம். samugammedia இந்தியாவின் விஜய் தொலைக்காட்சின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் தமிழர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.புங்குடுதீவின் மலரும் நினைவுகள் Dinner night 2023 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.முதன் முறையாக அவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திற்கு வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள 'சமூகம் மீடியா'வின் கலையகத்திற்கு வருகை தந்திருந்ததுடன் சமூகம் மீடியாவின் குடும்பத்தினால் அர்களுக்கு சிறப்பான வரவேற்பும் வழங்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செல்வா பலஸ் மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு கலகலப்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் இருவரும் அதில் பங்கேற்கவுள்ளனர்.குறிப்பாக புங்குடுதீவு மக்கனை ஒன்றிணைத்து அவர்களின் பழைய மலரும் நினைவுகளை மீட்டு சந்தோசத்தை கூட்டுகின்ற ஒரு நிகழ்வாகவே இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், அதில் தமிழர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.இதில் கலந்து கொள்ளவிரும்புபவர்கள் 0771208570 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.இந்த நிகழ்ச்சிகள் இலக்கம் 12 - பூனாரி லேன் கொக்குவில் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள செல்வா பலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.