இன்று காலை கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும்இ அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் என்னிடம் தெரிவித்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு சபாநாயகர் பதிலளித்தார்.
'பொலிஸாரின் கடமையைச் செய்வதிலிருந்து எம்மால் தடுக்க முடியாது' என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை கஜேந்திரகுமாரின் சித்தாந்தங்களுடன் எமக்கு உடன்பாடில்லை ஆனால் பாராளுமன்றத்திற்கு வந்து அறிக்கையொன்றை வெளியிட அவருக்கு உரிமை இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.