ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை எதிர்வரும் புதன் கிழமை சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன் கிழமை,
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளிவரவுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் ஊழல், மோசடி என்பன மனித உரிமை விடயங்களில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அன்றைய தினம் இலங்கை நேரப்படி மாலை 3.00 மணிக்கு மனித உரிமைகள் ஆணையாளர் வாய்மூலமாக அறிவிக்கவுள்ளார்.