எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது, என்ற அடிப்படையில் உரிய நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் இந்தாண்டு பொதுச் சபைக் கூட்டம் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக,பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கடந்த 11ஆம் திகதி தனக்கு அறிவித்துள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டிற்கு சாவல் விடுத்துள்ள ஜீ.எல்.பீரிஸ் - மண்டியிடுவாரா – சாகர. samugammedia எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது, என்ற அடிப்படையில் உரிய நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் இந்தாண்டு பொதுச் சபைக் கூட்டம் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக,பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கடந்த 11ஆம் திகதி தனக்கு அறிவித்துள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.