• May 03 2024

நியூசிலாந்திற்கு அடித்த அதிர்ஷ்டம்! தொடரை இழந்தது இந்தியா!!

crownson / Dec 1st 2022, 7:46 am
image

Advertisement

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்தியா அணி தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி மழையால் போட்டி கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து விடும் கட்டாயத்தில் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர் சுப்மன் கில் 13 ஆட்டங்களுடனும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான தவான் 28ஆட்டங்களுடனும், ரிஷப்பண்ட் 10 ஆட்டங்களுடனும்,  சூர்யகுமார் யாதவ் 6 ஆட்டங்களுடனும், தீபக் ஹூடா 12 ஆட்டங்களுடனும் ஆட்டமிழந்ததால், இந்திய அணி தடுமாறியது.

இதனையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர்- வாஷிங்டன் சுந்தர் ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை சற்று நிதனமாக கையாண்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் 49 ரன் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 62 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 18 ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டாதல் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி தொடர்வதில் சிக்கல் ஏற்படுத்தியதை அடுத்து போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனால் நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்திற்கு அடித்த அதிர்ஷ்டம் தொடரை இழந்தது இந்தியா நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்தியா அணி தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி மழையால் போட்டி கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து விடும் கட்டாயத்தில் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர் சுப்மன் கில் 13 ஆட்டங்களுடனும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான தவான் 28ஆட்டங்களுடனும், ரிஷப்பண்ட் 10 ஆட்டங்களுடனும்,  சூர்யகுமார் யாதவ் 6 ஆட்டங்களுடனும், தீபக் ஹூடா 12 ஆட்டங்களுடனும் ஆட்டமிழந்ததால், இந்திய அணி தடுமாறியது.இதனையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர்- வாஷிங்டன் சுந்தர் ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை சற்று நிதனமாக கையாண்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்ரேயாஸ் அய்யர் 49 ரன் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 62 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 18 ஓவரில் 104 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டாதல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி தொடர்வதில் சிக்கல் ஏற்படுத்தியதை அடுத்து போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement