இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையில் பிஸ்கட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, நாடு முழுவதும் பிஸ்கட் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பிஸ்கட் விலை இன்று(22) முதல் 8 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று பிஸ்கட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், புதிய விலையில் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் பிஸ்கட் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.