சீன பிரஜையொருவர் போலிகடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயற்சித்த சம்பவம் தொடர்பில் குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகளிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்களிற்கான அமைச்சர் டிரான் அலெஸ் தெரிவித்துள்ளார்.
சீன தூதரகத்தின் ஆலோசனையின் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போலி கடவுச்சீட்டுடன் பயணித்தவர் கைது செய்யப்பட்டவேளை தலையிட்டு விடுதலை செய்த அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிற்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போலிகடவுச்சீட்டுடன் சீன பயணியொருவரும் அவரது இரு நண்பர்களும் கொழும்பு விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்த வேளை அவர்கள் அடாவடியான விதத்தில் நடந்துகொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவதற்காக தடுத்துவைத்திருந்தவேளை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தலையிட்டு விடுவித்துள்ளார்.
இவர்கள் விடயத்தில் தலையிட்ட இராஜாங்க அமைச்சர் போலி கடவுச்சீட்டுடன் கைதுசெய்யப்பட்டவர் ஒரு முதலீட்டாளர் என தெரிவித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இரண்டு சீன பிரஜைகளும் ஒரு எகிப்திய பிரஜையும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முதலீட்டாளர்கள் போலிகடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் ஆச்சரியம் வெளியிட்டனர்
போலி கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் நுழைந்தால் தவறில்லையா நாட்டில் நடப்பது என்ன samugammedia சீன பிரஜையொருவர் போலிகடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயற்சித்த சம்பவம் தொடர்பில் குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகளிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்களிற்கான அமைச்சர் டிரான் அலெஸ் தெரிவித்துள்ளார்.சீன தூதரகத்தின் ஆலோசனையின் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.போலி கடவுச்சீட்டுடன் பயணித்தவர் கைது செய்யப்பட்டவேளை தலையிட்டு விடுதலை செய்த அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிற்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.போலிகடவுச்சீட்டுடன் சீன பயணியொருவரும் அவரது இரு நண்பர்களும் கொழும்பு விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்த வேளை அவர்கள் அடாவடியான விதத்தில் நடந்துகொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவதற்காக தடுத்துவைத்திருந்தவேளை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தலையிட்டு விடுவித்துள்ளார்.இவர்கள் விடயத்தில் தலையிட்ட இராஜாங்க அமைச்சர் போலி கடவுச்சீட்டுடன் கைதுசெய்யப்பட்டவர் ஒரு முதலீட்டாளர் என தெரிவித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து இரண்டு சீன பிரஜைகளும் ஒரு எகிப்திய பிரஜையும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முதலீட்டாளர்கள் போலிகடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் ஆச்சரியம் வெளியிட்டனர்