• May 19 2024

பாடசாலை மாணவர்களுக்கு குட் நியூஸ்...! கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு samugammedia

Chithra / May 19th 2023, 6:07 pm
image

Advertisement

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 95 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த விநியோகம் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கும் உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தகங்களை அச்சிட உதவிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான பொருட்களை வழங்குவதில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் எங்களுக்கு ஆதரவளித்தது.


மூன்று மொழிகளில் 350 வகையான பாடப்புத்தகங்களை அச்சிட அரசாங்கம் 16 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இது முந்தையதை விட நான்கு மடங்கு அதிகம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரச அச்சுக் கழகம் இந்தியா வழங்கிய உதவியின் மூலம் தேவையான 45% புத்தகங்களை மூலப் பொருட்களைப் பெற்று வழங்கியது. மீதமுள்ள 55% 22 தனியார் அச்சக நிறுவனங்களால் அச்சிடப்படுகிறது.

பாடசாலை மாணவர்களுக்கு குட் நியூஸ். கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு samugammedia நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 95 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த விநியோகம் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கும் உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.பாடப்புத்தகங்களை அச்சிட உதவிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்தார்.2023 ஆம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான பொருட்களை வழங்குவதில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் எங்களுக்கு ஆதரவளித்தது.மூன்று மொழிகளில் 350 வகையான பாடப்புத்தகங்களை அச்சிட அரசாங்கம் 16 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இது முந்தையதை விட நான்கு மடங்கு அதிகம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அரச அச்சுக் கழகம் இந்தியா வழங்கிய உதவியின் மூலம் தேவையான 45% புத்தகங்களை மூலப் பொருட்களைப் பெற்று வழங்கியது. மீதமுள்ள 55% 22 தனியார் அச்சக நிறுவனங்களால் அச்சிடப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement