குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ள 'மிராக்கிள் கார்டனை' பார்வையிடச் சென்ற முதல் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இதன்படி மேலும் 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என அறியமுடிகின்றது.
இதற்கமைய, தற்போது முன்னாள் ஜனாதிபதி டுபாயில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ளதாக புகைப்படம் வெளியாகியுள்ள போதிலும் இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதுடன், இதனை வடிவமைத்திருக்கலாம் எனவும் சிலர் கருத்திட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அந்த செய்தி பொய்யானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் டுபாயில் சுற்றித்திரியும் கோட்டா வெளியான புகைப்படம் குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ள 'மிராக்கிள் கார்டனை' பார்வையிடச் சென்ற முதல் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.இதன்படி மேலும் 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என அறியமுடிகின்றது.இதற்கமைய, தற்போது முன்னாள் ஜனாதிபதி டுபாயில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவந்துள்ளது.இதேவேளை, குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்ச டுபாயில் உள்ளதாக புகைப்படம் வெளியாகியுள்ள போதிலும் இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதுடன், இதனை வடிவமைத்திருக்கலாம் எனவும் சிலர் கருத்திட்டு வருகின்றனர்.எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அந்த செய்தி பொய்யானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.