• May 19 2024

அரசாங்கம் இனவாதத்தை தூண்டி பதவியை தக்க வைக்க முனைகிறது - சந்திரசேகரன் தெரிவிப்பு....!samugammedia

Anaath / Sep 29th 2023, 12:18 pm
image

Advertisement

 ரணில் ராஜபக்சகளினுடைய அரசாங்கங்கள் தமது ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக இனவாதத்தை  தூண்டுவது மட்டுமல்லாமல்  மதவாதத்தையும் தூண்டுவது என்பது மக்களுக்கும் நன்றாக தெரியும். அது மாத்திரமல்ல இந்த ரணில் விக்கிரம சிங்க  என்பவர் நேசத்தில் ஈரமில்லாத , உணர்வு இல்லாத ஒரு மனித ஜடமாக இருப்பதுவும் மக்களுக்கு தெரியும்  என மக்கள் விடுதலை முன்னணியின்   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

இன்று யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின்   கட்சி அலுவலகத்தில்  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் அவர், 

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டம் என்பது அந்த போராட்டத்தின் மூலமாக  ஆட்சியாளர்களை அடித்து  விரட்டினார்கள். அது மாத்திரமல்ல அந்த போராட்டத்தின் பொழுது நாட்டிலிருக்கின்ற தமிழ், சிங்கள,முஸ்லி ம்,  வேடர், மலையகம் உள்ளிட்ட அனைத்து மொழியை சார்ந்த அனைத்து மக்களும்  இந்த போராட்டத்துக்கு ஆசீர்வதித்தார்கள். 

அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அதன் மூலமாக தங்களுடைய மத நல்லிணக்கத்தை, இன நல்லிணக்கத்தை   வெளிப்படுத்தினார்கள். அதன் மூலமாக கடந்த 75 வருடங்களாக இருந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய இருப்புக்காக,  தங்களுடைய ஆட்சியை அமைத்துக்கொள்ளுவதற்காக மதவாதத்தையும் இன வாதத்தையும் பயன்படுத்தி  அல்லது மத கலவரங்களை , இனக்கலவரங்களை பிரயோகித்து அதன் மூலமாக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கும் ஆட்சியை பிடித்து கொள்வதற்குமான நடவடிக்கை எடுத்தவர்களுக்கு கோல்பேஸ் போராட்டதின் மூலமாக சாவுமணி அடிக்கப்பட்டது. இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் சாவுமணி  அடிக்கப்பட்ட நிலையில் இன்றைக்கு எங்களுக்கு காணக்கூடியதாக இருக்கிறது.

மீண்டும் அந்த இனவெறியை  சிங்கள மக்களுடைய இனவெறி இரத்தத்தை தூண்டுவது எப்படி? தமிழர்களுடைய இனவெறியை தூண்டுவது எப்படி? அதற்கான மூலதனங்கள் என்ன? அதற்கான செயற்பாடுகள் என்ன என்பதை தேடி பார்க்கின்ற பொழுது இன்றைக்கு குறுந்தூர் மலை பிரச்சினை பூத காரமான பிரச்சினையாக மாறியுள்ளது.

 அந்த பிரச்சனை விசேடமாக தமிழர்களுக்கிடையிலும் அதாவது இந்துக்களுக்கிடையிலும் பௌத்தர்களுக்கிடையிலும் ஒரு இனக்கலவரத்தை அல்லது மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது. அந்த முயற்சி முழுமையாக தோல்வி அடைய செய்யப்பட்டது. 

மக்கள் அதற்கு தயார் இல்லை. இன்றைக்கு இலங்கையில் இருக்கின்ற சிங்கள மக்களோ தமிழ் மக்களோ தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இனவாத அடிப்படையில் மத அடிப்படையில் போராடுவதற்கு பிளவு படுவதற்கு அதற்கான கலவரங்களை உருவாக்குவதற்கு தயார் இல்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வாறு வெளிப்படுத்தி இருக்கின்ற போதுதான் இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும்  மீண்டும் இனக்கலவரத்தை தூண்டுகின்ற அந்த இனவெறியை தூண்டுகின்ற செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

இன்று குறுந்தூர் மலை பிரச்சினை மறுபடியும் பூதாகரமாக வெடிக்கின்றது.  அதை சொல்கின்ற மேலும் பல்வேறு பன்சலைகள் அல்லது பௌத்த விகாரைகளை அமைக்கின்ற நடவடிக்கை, அதன் மூலமாக பாரிய பிணக்குகளை தோற்றுவித்த  நடவடிக்கை, அதே போன்று இன்றைக்கு எங்களுக்கு எல்லோருக்கும் தெரியும்.

 திருகோணமலையில் ஒரு சில பிரதேசங்களில் இன்றைக்கு தமிழருடைய ஒரு பிரதேசம் ஆக்கிரமிக்கப்படுகின்ற ஒரு நிலைமை, அங்கு தமிழ் கோவிலாக, தமிழ் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான முயற்சி அதே போன்று இன்றைக்கு எல்லோருக்கும் தெரியும் மட்டக்களப்பில் இருக்கின்ற மாடுகளை மேய்கின்ற மேய்ச்சல் நிலத்துக்கு கூட வேட்டு வைக்கின்ற  ஒரு சில சிங்கள அரசியல்வாதிகளும், அதே போன்று தமிழ் அரசியல் வாதிகளும் அதே போன்று ஒரு சில மத குருமார்களும் சேர்ந்து செயல் படுவது எங்களால் காணக்கூடியதாக இருக்கிறது. 

எல்லா இடங்களிலும் மீதும் இந்த இனவாதத்தை, இனவெறியை, மத கலவரத்தை தூண்டுகின்ற  நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்ற அரசாங்கமே இந்த ரணில் ராஜபக்ஷவின் அரசாங்கமாகும். அதற்கு விசேடமாக நாங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையிலும் தேசிய மக்கள் சக்தி என்ற வகையிலும் நாங்கள் மக்களிடம் மிக மிக வினயமாக கேட்டு கொள்வது வேறெதுவுமல்ல.

2022 ஆம் ஆண்டில்  இந்த நாட்டில் போராட்டத்தின் மூலமாக இந்த நாட்டில் இருக்கின்ற இளைஞர்கள் யுவதிகள் மாத்திரமன்றி நாட்டில் இருக்கின்ற அனைத்து முற்போக்கு எல்லா இயக்கங்களும் சேர்ந்து இந்த இனவாதத்துக்கு சாவுமணி அடித்திருக்கின்றது. 

அந்த சாவுமணி அடிக்கப்பட்ட அந்த இனவாதத்தை அந்த சாம்பலை கழுவி மீண்டும் மக்கள் மீது தூவி விட்டு மீண்டும்  இனக்கலவரத்தை ஏற்படுத்துகின்ற காவலித்தனமான காட்டு மிராண்டித்தனமான அரக்கர்களுக்கு மாத்திரமே இது பொருந்தும். காவாலிகளுக்கு மாத்திரமே இந்த இனவாதம் தேவை படுகிறது. 

இந்த நாட்டின் இரத்த வெறியை ருசிக்கின்ற இரத்த காட்டேரிகளுக்கு இன்றைக்கு இந்த இனக்கலவரம் தேவைப்படுகின்றதே  தவிர மக்களுக்கு அல்ல. அதனால் மக்களிடம் கேட்டுக்கொள்வது வேறு எதுவுமல்ல. இன்றைக்கு சகலதையும் இழந்து போயிருக்கிநிற அரசாங்கம் தங்களுக்கிருக்கின்ற மக்கள் செல்வாக்கு கிடையாது. மக்கள் ஆணை கிடையாது. அதனால் இன்றைக்கு தங்களுடைய இறுதி கால, அந்திம காலம் உதயமாகிக்கொண்டிருக்கிறது. 

தங்களுடைய 75 வருட வாழ்கை அஸ்தமனமாகி கொண்டிருக்கிறது. முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. முடிவுக்கு வருகின்ற போது இவர்கள் மீண்டும் எப்படியாவது தங்களை உயிர்ப்பித்து கொள்வதற்காகவே மீண்டும் சக்ரான்களை உருவாக்குகின்ற, மீண்டும் பிரபாகரன்களை உருவாக்குகின்ற  மீண்டும் இனக்கலவரத்தை தோற்று விக்கின்ற மீண்டும் கருப்பு ஜூலையை ஏற்படுத்துகின்ற  அவ்வாறான செயற்பாடுகளை இன்றைக்கு இந்த ரணில் ராஜபக்ஸவினுடைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  வேறு எதற்காகவும் அல்ல. இந்த ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கு  இவர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு புகளிடம் வேறு எதுவுமல்ல இனவாதம், மதவாதமாகும். 

ஆனால்  அந்த இனவாதம் மதவாதத்திடம் சரணடைகின்ற செயற்பாட்டினையே இன்றைக்கு அந்த குறுந்தூர் மலையூடாக, இன்றைக்கு அந்த திருகோணமலையில் பௌத்த விகாரைகள் அமைப்பதனூடாக, மட்டக்களப்பில் இருக்கின்ற அதாவது   தீவன நிலையம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அவற்றை எது எல்லாத்தையும் காட்டுக்குவது வேறு எதுவுமல்ல மீண்டும் இவர்களுடைய ஆட்சியை தக்கவைத்து கொள்ளுகின்ற பாவித்தனமான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றார்கள். அதனால் மக்களிடம் நாங்கள் கேட்டு கொள்வது மக்கள் இதற்கு ஏமாற வேண்டாம். நாங்கள் இனவாத ரீதியாக இரத்தம் சிந்தியது போதும். நாட்டில் தமிழன் என்றும் சிங்களவன் என்றும் பிரித்து துண்டாடிய வரலாறு எங்களிடம் இருக்கிறது.

இந்த நாட்டில் ஆட்சியாளர்கள் அவ்வாறு தான் இருந்திருக்கிறார்கள்.  ஆனால் அதற்கு முற்று புள்ளி வைக்கின்ற காலம் இன்று உதயமாகி இருக்கின்றது. ஆனால்  நாங்கள் மிக மிக விரைவாக கேட்டு கொள்வது வேறு எதுவுமல்ல இவைகள் அனைத்துக்கும் முற்று புள்ளி வைக்க கூடியது இந்த 75 வருட சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடியது வேறு எதுவுமல்ல தேசிய மக்கள் சக்தி ஆகும். 


அதனால் தேசிய மக்கள் சக்தியோடு இந்த நாட்டில் இன  ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு எமது வளங்களை பாதுகாத்து கொள்வதற்கு, எமது மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு, எமது மக்களுக்கு தேவையான உண்மையான ஆட்சியை உருவாக்கிக்கொள்வதற்கு  தேசிய மக்களுடன் அணி திரளுங்கள் என்று நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.  என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இனவாதத்தை தூண்டி பதவியை தக்க வைக்க முனைகிறது - சந்திரசேகரன் தெரிவிப்பு.samugammedia  ரணில் ராஜபக்சகளினுடைய அரசாங்கங்கள் தமது ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக இனவாதத்தை  தூண்டுவது மட்டுமல்லாமல்  மதவாதத்தையும் தூண்டுவது என்பது மக்களுக்கும் நன்றாக தெரியும். அது மாத்திரமல்ல இந்த ரணில் விக்கிரம சிங்க  என்பவர் நேசத்தில் ஈரமில்லாத , உணர்வு இல்லாத ஒரு மனித ஜடமாக இருப்பதுவும் மக்களுக்கு தெரியும்  என மக்கள் விடுதலை முன்னணியின்   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின்   கட்சி அலுவலகத்தில்  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர், 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டம் என்பது அந்த போராட்டத்தின் மூலமாக  ஆட்சியாளர்களை அடித்து  விரட்டினார்கள். அது மாத்திரமல்ல அந்த போராட்டத்தின் பொழுது நாட்டிலிருக்கின்ற தமிழ், சிங்கள,முஸ்லி ம்,  வேடர், மலையகம் உள்ளிட்ட அனைத்து மொழியை சார்ந்த அனைத்து மக்களும்  இந்த போராட்டத்துக்கு ஆசீர்வதித்தார்கள். அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அதன் மூலமாக தங்களுடைய மத நல்லிணக்கத்தை, இன நல்லிணக்கத்தை   வெளிப்படுத்தினார்கள். அதன் மூலமாக கடந்த 75 வருடங்களாக இருந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய இருப்புக்காக,  தங்களுடைய ஆட்சியை அமைத்துக்கொள்ளுவதற்காக மதவாதத்தையும் இன வாதத்தையும் பயன்படுத்தி  அல்லது மத கலவரங்களை , இனக்கலவரங்களை பிரயோகித்து அதன் மூலமாக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கும் ஆட்சியை பிடித்து கொள்வதற்குமான நடவடிக்கை எடுத்தவர்களுக்கு கோல்பேஸ் போராட்டதின் மூலமாக சாவுமணி அடிக்கப்பட்டது. இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் சாவுமணி  அடிக்கப்பட்ட நிலையில் இன்றைக்கு எங்களுக்கு காணக்கூடியதாக இருக்கிறது.மீண்டும் அந்த இனவெறியை  சிங்கள மக்களுடைய இனவெறி இரத்தத்தை தூண்டுவது எப்படி தமிழர்களுடைய இனவெறியை தூண்டுவது எப்படி அதற்கான மூலதனங்கள் என்ன அதற்கான செயற்பாடுகள் என்ன என்பதை தேடி பார்க்கின்ற பொழுது இன்றைக்கு குறுந்தூர் மலை பிரச்சினை பூத காரமான பிரச்சினையாக மாறியுள்ளது. அந்த பிரச்சனை விசேடமாக தமிழர்களுக்கிடையிலும் அதாவது இந்துக்களுக்கிடையிலும் பௌத்தர்களுக்கிடையிலும் ஒரு இனக்கலவரத்தை அல்லது மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது. அந்த முயற்சி முழுமையாக தோல்வி அடைய செய்யப்பட்டது. மக்கள் அதற்கு தயார் இல்லை. இன்றைக்கு இலங்கையில் இருக்கின்ற சிங்கள மக்களோ தமிழ் மக்களோ தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இனவாத அடிப்படையில் மத அடிப்படையில் போராடுவதற்கு பிளவு படுவதற்கு அதற்கான கலவரங்களை உருவாக்குவதற்கு தயார் இல்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வாறு வெளிப்படுத்தி இருக்கின்ற போதுதான் இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும்  மீண்டும் இனக்கலவரத்தை தூண்டுகின்ற அந்த இனவெறியை தூண்டுகின்ற செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இன்று குறுந்தூர் மலை பிரச்சினை மறுபடியும் பூதாகரமாக வெடிக்கின்றது.  அதை சொல்கின்ற மேலும் பல்வேறு பன்சலைகள் அல்லது பௌத்த விகாரைகளை அமைக்கின்ற நடவடிக்கை, அதன் மூலமாக பாரிய பிணக்குகளை தோற்றுவித்த  நடவடிக்கை, அதே போன்று இன்றைக்கு எங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். திருகோணமலையில் ஒரு சில பிரதேசங்களில் இன்றைக்கு தமிழருடைய ஒரு பிரதேசம் ஆக்கிரமிக்கப்படுகின்ற ஒரு நிலைமை, அங்கு தமிழ் கோவிலாக, தமிழ் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான முயற்சி அதே போன்று இன்றைக்கு எல்லோருக்கும் தெரியும் மட்டக்களப்பில் இருக்கின்ற மாடுகளை மேய்கின்ற மேய்ச்சல் நிலத்துக்கு கூட வேட்டு வைக்கின்ற  ஒரு சில சிங்கள அரசியல்வாதிகளும், அதே போன்று தமிழ் அரசியல் வாதிகளும் அதே போன்று ஒரு சில மத குருமார்களும் சேர்ந்து செயல் படுவது எங்களால் காணக்கூடியதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் மீதும் இந்த இனவாதத்தை, இனவெறியை, மத கலவரத்தை தூண்டுகின்ற  நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்ற அரசாங்கமே இந்த ரணில் ராஜபக்ஷவின் அரசாங்கமாகும். அதற்கு விசேடமாக நாங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையிலும் தேசிய மக்கள் சக்தி என்ற வகையிலும் நாங்கள் மக்களிடம் மிக மிக வினயமாக கேட்டு கொள்வது வேறெதுவுமல்ல.2022 ஆம் ஆண்டில்  இந்த நாட்டில் போராட்டத்தின் மூலமாக இந்த நாட்டில் இருக்கின்ற இளைஞர்கள் யுவதிகள் மாத்திரமன்றி நாட்டில் இருக்கின்ற அனைத்து முற்போக்கு எல்லா இயக்கங்களும் சேர்ந்து இந்த இனவாதத்துக்கு சாவுமணி அடித்திருக்கின்றது. அந்த சாவுமணி அடிக்கப்பட்ட அந்த இனவாதத்தை அந்த சாம்பலை கழுவி மீண்டும் மக்கள் மீது தூவி விட்டு மீண்டும்  இனக்கலவரத்தை ஏற்படுத்துகின்ற காவலித்தனமான காட்டு மிராண்டித்தனமான அரக்கர்களுக்கு மாத்திரமே இது பொருந்தும். காவாலிகளுக்கு மாத்திரமே இந்த இனவாதம் தேவை படுகிறது. இந்த நாட்டின் இரத்த வெறியை ருசிக்கின்ற இரத்த காட்டேரிகளுக்கு இன்றைக்கு இந்த இனக்கலவரம் தேவைப்படுகின்றதே  தவிர மக்களுக்கு அல்ல. அதனால் மக்களிடம் கேட்டுக்கொள்வது வேறு எதுவுமல்ல. இன்றைக்கு சகலதையும் இழந்து போயிருக்கிநிற அரசாங்கம் தங்களுக்கிருக்கின்ற மக்கள் செல்வாக்கு கிடையாது. மக்கள் ஆணை கிடையாது. அதனால் இன்றைக்கு தங்களுடைய இறுதி கால, அந்திம காலம் உதயமாகிக்கொண்டிருக்கிறது. தங்களுடைய 75 வருட வாழ்கை அஸ்தமனமாகி கொண்டிருக்கிறது. முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. முடிவுக்கு வருகின்ற போது இவர்கள் மீண்டும் எப்படியாவது தங்களை உயிர்ப்பித்து கொள்வதற்காகவே மீண்டும் சக்ரான்களை உருவாக்குகின்ற, மீண்டும் பிரபாகரன்களை உருவாக்குகின்ற  மீண்டும் இனக்கலவரத்தை தோற்று விக்கின்ற மீண்டும் கருப்பு ஜூலையை ஏற்படுத்துகின்ற  அவ்வாறான செயற்பாடுகளை இன்றைக்கு இந்த ரணில் ராஜபக்ஸவினுடைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  வேறு எதற்காகவும் அல்ல. இந்த ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கு  இவர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு புகளிடம் வேறு எதுவுமல்ல இனவாதம், மதவாதமாகும். ஆனால்  அந்த இனவாதம் மதவாதத்திடம் சரணடைகின்ற செயற்பாட்டினையே இன்றைக்கு அந்த குறுந்தூர் மலையூடாக, இன்றைக்கு அந்த திருகோணமலையில் பௌத்த விகாரைகள் அமைப்பதனூடாக, மட்டக்களப்பில் இருக்கின்ற அதாவது   தீவன நிலையம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அவற்றை எது எல்லாத்தையும் காட்டுக்குவது வேறு எதுவுமல்ல மீண்டும் இவர்களுடைய ஆட்சியை தக்கவைத்து கொள்ளுகின்ற பாவித்தனமான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றார்கள். அதனால் மக்களிடம் நாங்கள் கேட்டு கொள்வது மக்கள் இதற்கு ஏமாற வேண்டாம். நாங்கள் இனவாத ரீதியாக இரத்தம் சிந்தியது போதும். நாட்டில் தமிழன் என்றும் சிங்களவன் என்றும் பிரித்து துண்டாடிய வரலாறு எங்களிடம் இருக்கிறது.இந்த நாட்டில் ஆட்சியாளர்கள் அவ்வாறு தான் இருந்திருக்கிறார்கள்.  ஆனால் அதற்கு முற்று புள்ளி வைக்கின்ற காலம் இன்று உதயமாகி இருக்கின்றது. ஆனால்  நாங்கள் மிக மிக விரைவாக கேட்டு கொள்வது வேறு எதுவுமல்ல இவைகள் அனைத்துக்கும் முற்று புள்ளி வைக்க கூடியது இந்த 75 வருட சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடியது வேறு எதுவுமல்ல தேசிய மக்கள் சக்தி ஆகும். அதனால் தேசிய மக்கள் சக்தியோடு இந்த நாட்டில் இன  ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு எமது வளங்களை பாதுகாத்து கொள்வதற்கு, எமது மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு, எமது மக்களுக்கு தேவையான உண்மையான ஆட்சியை உருவாக்கிக்கொள்வதற்கு  தேசிய மக்களுடன் அணி திரளுங்கள் என்று நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.  என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement