• Sep 21 2024

அம்பாறையில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை..!samugammedia

Sharmi / Jun 29th 2023, 1:47 pm
image

Advertisement

புனித ஹஜ் பெருநாள் தொழுகை  அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (29) வியாழக்கிழமை  காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது  கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும்  பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.

மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .

இதே வேளை முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் ஹூதா ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக  இடம்பெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து  தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள்  நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




அம்பாறையில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை.samugammedia புனித ஹஜ் பெருநாள் தொழுகை  அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (29) வியாழக்கிழமை  காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது  கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும்  பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .இதே வேளை முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் ஹூதா ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக  இடம்பெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து  தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள்  நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement