சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது வாராந்தம் 4 தடவைகள் இயங்கும் வாராந்த விமான சேவையை நாளாந்தம் இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இடம்பெறும் இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 67 ஆவது மாநாட்டில் தொலை காணொளி ஊடாக கருத்துரைத்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி முதல் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை நாளாந்தம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.