• Sep 20 2024

யாழ். மண்டைதீவில் நாளை கடற்படைக்கு காணி சுவீகரிப்பு..! – எதிர்ப்புப் போராட்டத்திற்கு அணிதிரளுமாறு அழைப்பு samugammedia

Chithra / Jul 11th 2023, 6:28 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்காக மேற்கொள்ளப்படவுள்ள காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கு அனைவரையும் நாளைய தினம் மண்டைதீவில் அணிதிரளுமாறு யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில், வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், நாளை புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் நாளை (12) காலை 7.30 மணியளவில் மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் – என்றுள்ளது.

யாழ். மண்டைதீவில் நாளை கடற்படைக்கு காணி சுவீகரிப்பு. – எதிர்ப்புப் போராட்டத்திற்கு அணிதிரளுமாறு அழைப்பு samugammedia யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்காக மேற்கொள்ளப்படவுள்ள காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கு அனைவரையும் நாளைய தினம் மண்டைதீவில் அணிதிரளுமாறு யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த செய்திக்குறிப்பில், வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், நாளை புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் நாளை (12) காலை 7.30 மணியளவில் மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் – என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement