• Sep 20 2024

யாழ். பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கு இந்திய இணை அமைச்சர் விஜயம்

Chithra / Feb 11th 2023, 9:52 am
image

Advertisement

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தலைமையிலான குழுவினர்கள் இன்று யாழ். பருத்தித்துறை மீன்பிடித்துறை முகத்திற்கு விஜயம் செய்தனர்.


பின்னர் மீனவசமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன் அதற்கான ஆலோசனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான மானிய உதவிகளும் வழங்குவது தொடர்பாக கலந்துறையாடப்பட்டன.


யாழ். இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் இந்திய தூதர அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் தலைமையிலான குழுவினர்கள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கு இந்திய இணை அமைச்சர் விஜயம் இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தலைமையிலான குழுவினர்கள் இன்று யாழ். பருத்தித்துறை மீன்பிடித்துறை முகத்திற்கு விஜயம் செய்தனர்.பின்னர் மீனவசமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன் அதற்கான ஆலோசனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான மானிய உதவிகளும் வழங்குவது தொடர்பாக கலந்துறையாடப்பட்டன.யாழ். இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் மற்றும் இந்திய தூதர அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் தலைமையிலான குழுவினர்கள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement