யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் இன்று மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நறடவடிக்கையின் போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 4 பரல் கோடா உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மருதங்கேணி பொலிசார் குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.