• Sep 19 2024

யாழ். ஆலயங்களில் சங்கிலி அறுப்பு - பெண் உள்ளிட்ட இருவர் கைது! SamugamMedia

Chithra / Mar 6th 2023, 9:03 am
image

Advertisement


யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் இளவாலை பொலிசாரால் அதிரடியாக கைது 

நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது. 

அண்மையில் ஆலயங்களில் இடம்பெற்ற பல்வேறுபட்டநகை  திருட்டுகளுடன் குறித்த கும்பலுக்கு  தொடர்புள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை இவ்வாறு களவாடப்பட்டது.

இந்நிலையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளவாலை பொலிஸார் ஒரு பெண் (43) மற்றும் ஒரு ஆண் (வயது 26) ஆகியோரை கைது செய்துள்ளதுடன் ஒரு பெண் தலைமறைவாகியுள்ளார்.

 இதன்போது திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


யாழ். ஆலயங்களில் சங்கிலி அறுப்பு - பெண் உள்ளிட்ட இருவர் கைது SamugamMedia யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் இளவாலை பொலிசாரால் அதிரடியாக கைது நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் ஆலயங்களில் இடம்பெற்ற பல்வேறுபட்டநகை  திருட்டுகளுடன் குறித்த கும்பலுக்கு  தொடர்புள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை இவ்வாறு களவாடப்பட்டது.இந்நிலையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளவாலை பொலிஸார் ஒரு பெண் (43) மற்றும் ஒரு ஆண் (வயது 26) ஆகியோரை கைது செய்துள்ளதுடன் ஒரு பெண் தலைமறைவாகியுள்ளார். இதன்போது திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement