2023ம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் யாழ். மாவட்ட ரீதியில் 196 புள்ளிகளை பெற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்தார்.
யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதற் தடவையாக யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலைக்கு குறித்த மாணவி பெருமை சேர்த்துள்ளதாக யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்தார்.
2023 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரியில் இருந்து 110 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என தெரிவித்தார்.