தோப்பூர் -கூர்கண்டம் தாருஸ்ஸலாம் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 33 வருடங்களாகிய நிலையில் வரலாற்றில் முதற் தடவையாக மாணவன் ஒருவர் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.
நேற்று வெளியான பெறுபேற்றின் அடிப்படையில் அஸாம் முஹமட் பர்ஹான் எனும் மாணவன் 144 புள்ளிகளைப்பெற்று இச்சாதனையை புரிந்துள்ளார்.
இச்சாதனை புரிந்த மாணவனையும், கற்பித்த ஆசிரியரையும் ஊர்மக்களும், பாடசாலை சமூகமும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.