பாகிஸ்தானில் அடக்கம் செய்யப்பட்ட இளம் பெண்களின் சடலங்களை புதைகுழியில் இருந்து தோண்டி எடுத்து பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் பெற்றோரை பரிதவிக்க வைத்துள்ளது.
இந்த கொடூரங்கள் காரணமாக பெற்றோர்கள் தமது மகள்களின் கல்லறைக்கு பூட்டு போட்டு பாதுகாத்து வருகின்றனர்.
கல்லறைகளை பாதுகாக்கும் பாதுகாவலர் உட்பட இனம் தெரியாத நபர்கள் வரை இந்த கொடூர செயல்களை மனிதாபமானமின்றி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களை தோண்டியெடுத்து பலாத்காரம் செய்வதனால் இறந்தவர்களின் புனிதத்தினை பேணுவதற்கே இவ்வாறு பூட்டு போட்டு பாதுக்காத்து வருகின்றனர்.
அந்த வகையில், கராச்சியில் வடக்கு நஜிமாபாத்தை சேர்ந்த முகமது ரிஸ்வான் என்ற கல்லறை பாதுகாவலன் 48 பெண்களின் சடலங்களை தோண்டியெடுத்து துஷ்பிரயோகம் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய பாதக செயல்களிற்கு காரணம் கடுமையான இஸ்லாமிய கோட்பாடு என்று முன்னாள் முஸ்லீம் நாத்திக ஆர்வலரும், "கடவுளின் சாபம் , நான் ஏன் இஸ்லாத்தை விட்டு வெளியேறினேன்"? என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஹாரிஸ் சுல்தான் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமையகத்தின் கூற்றுப்படி 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பாகிஸ்தானிய பெண்கள் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது பலாத்காரம் செய்யப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.