பல நாடுகளில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக 102 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கு ஆபிரிக்காவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் வெப்பநிலை 48 பாகை செல்சியஸைத் தாண்டியுள்ளதாகவும், அதிக வெப்பத்தினால் வைத்தியசாலைகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.