இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம் இந்திய மத்திய புலனாய்வு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி வழியாக இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட இந்திய மதிப்பில் சுமார் ரூ5.30 கோடி மதிப்பிலான 9 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்டு படகும் பறிமுதல் செய்யப்பட்டு தொடர் விசாரணையில் சுங்கத்துறையினர், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.