மன்னார் பிரதேச செயலகத்தின் களஞ்சியசாலையொன்றில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரதேச செயலகத்தின் களஞ்சியசாலையில் இருந்து அலுமினிய பார்கள், நான்கு எரிவாயு சிலிண்டர்கள், ஐந்து நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட சொத்தின் பெறுமதி ரூ.114,984 என மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மன்னார் பிரதேச செயலக நிர்வாக அதிகாரியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பிரதேச செயலகத்தில் பெருந்தொகை பொருட்கள் திருட்டு. samugammedia மன்னார் பிரதேச செயலகத்தின் களஞ்சியசாலையொன்றில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பிரதேச செயலகத்தின் களஞ்சியசாலையில் இருந்து அலுமினிய பார்கள், நான்கு எரிவாயு சிலிண்டர்கள், ஐந்து நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட சொத்தின் பெறுமதி ரூ.114,984 என மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மன்னார் பிரதேச செயலக நிர்வாக அதிகாரியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.